For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாட்டுத் தீவன ஊழல்.. 4வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை

மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ராஞ்சி: மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 1996-ஆம் ஆண்டு பீகார் மாநில முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்கான தீவனம் கொள்முதல் செய்ததில் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கையாடல் செய்ததாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவற்றுள் 3 ஊழல் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

Lalu prasad Yathav convicts for 4th fodder scam case

இந்நிலையில் தும்கா கருவூலத்தில் மாட்டு தீவன கொள்முதல் தொடர்பாக ரூ.3.76 கோடி முறைகேடு செய்ததாக பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடரப்பட்டது.

இந்த 4-ஆவது ஊழல் வழக்கு விசாரணை கடந்த 19-ஆம் தேதி ராஞ்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு குற்றவாளி என்று கூறிய நீதிபதி, ஜெகனனாத் மிஸ்ராவை விடுவித்து உத்தரவிட்டார். மேலும் தண்டனை விவரங்கள் மார்ச் 24-இல் அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மொத்தம் மாட்டு தீவன ஊழல் தொடர்பான 5 வழக்குகளில் ஏற்கெனவே 3 வழக்குகளில் 13.5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4-ஆவது வழக்கில் 7ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது லாலுவுக்கு கிடைத்த பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

English summary
4th Fodder scam case: Lalau Prasad convicts for 7 years prison by Ranchi CBI Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X