விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்!.. மீட்பு பணிகள் தீவிரம்
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜயவாடாவில் இந்திரா கீழாத்ரி மலைக்குன்றுவில் கனகதுர்கா கோயில் உள்ளது. இந்த கோயிலில் புதன்கிழமை மாலை பல கற்பாறைகள் உருண்டு கோயிலின் கொட்டகை மீது விழுந்தது.
இந்த சம்பவத்தால் 5 பேர் காயமடைந்தனர். இரு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நிதீஷ் குமார் மீது செம கோபத்தில் பீகார் மக்கள்.. பிரதமர் மோடிக்கு ஜே.. பரபரப்பு கருத்துக் கணிப்பு
10 நாட்கள் தசரா திருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடினர். இந்த அசம்பாவித சம்பவத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவதாக இருந்தது. நிலச்சரிவு ஏற்பட்டதால் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.