மப்பில் மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரர்.. கல்லால் அடித்துக்கொன்று செல்பி எடுத்த கணவர்!
அவுரங்காபாத்தில் தனது மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரரை கொலை செய்து செல்பி எடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவுரங்காபாத்: தனது மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரரை கொலை செய்து செல்பி எடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவுரங்காபாத்தை சேர்ந்தவர் மோகித். 23 வயதான இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது.
மோகித்தும், அவரது மனைவியும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். மோகித் சட்ட கல்லூரியில் படித்து வருகிறார்.
மது அருந்தியுள்ளனர்
மோகித்தின் சகோதரி வீட்டில் பிரபாகர் என்ற வாலிபர் வேலை பார்த்து வருகிறார். அவருடன் மோகித்துக்கு பழக்கம் ஏற்பட்டதில் இருவரும் சேர்ந்து அவ்வப்போது மது அருந்தியுள்ளனர்.
ஆபாசமாக வர்ணித்து
சம்பவத்தன்று மோகித் பிரபாகருடன் சேர்ந்து மது குடித்து உள்ளார். மதுபோதை தலைக்கேறிய நிலையில் அவரது மனைவியை பிரபாகர் ஆபாசமாக வர்ணித்து உள்ளார்.
உடலுடன் செல்பி
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மோகித் அங்கு கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி பிரபாகரை கொலை செய்தார். பின்னர் அவரது உடலுடன் ‘செல்பி' எடுத்து, அதை தனது மனைவிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
மோகித் கைது
பின்னர் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். சடலத்தை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், மோகித்தை அதிரடியாக கைது செய்தனர்.