For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியை ஆளில்லா விமானம் மூலம் தாக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத் துறை எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகள் டெல்லியில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகள் டெல்லியில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்க திட்டமிட்டுள்ளன என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து டெல்லி போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

LeT, Jaish-e-Mohammed to plan drone attack on Delhi, says report

டெல்லியில் ஆளில்லா விமனங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெல்லியில் பறக்கும் அனைத்து விமானங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்று இயக்கப்படும் ஆளில்லா விமானங்கள் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

முன்னதாக குடியரசு தின விழாவின்போது தீவிரவாதிகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டது. 3 மாதங்களில் லக்ஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை அண்மையில் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Intelligence agencies have warned Delhi police that LeT, Jaish-e-Mohammed teerorists are planning to carry out drone attack in the capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X