டிசம்பர் 29ம் தேதி ஹரித்வார் ரயில் நிலையம், கோவில்கள் வெடித்துச் சிதறும்: லஷ்கர் இ தொய்பா மிரட்டல்
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் ரயில் நிலைய மேலாளர் கோபால் கிருஷ்ண தாஸுக்கு கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடித்ததில் கூறியிருப்பதாவது,
நான் லஷ்கர் இ தொய்பா கமான்டர் கரீம் அன்சாரி. வரும் டிசம்பர் மாதம் 29ம் தேதி ஹரித்வார் ரயில் நிலையம் மற்றும் நகரில் உள்ள கோவில்களை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக ரயில் நிலையம் மற்றும் கோவில்களை தகர்க்கப் போவதாக ரயில் நிலைய மேலாளருக்கு கடிதம் வருவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. இத்தனை தடவையும் அந்த கடிதங்கள் எங்கிருந்து வந்தன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தற்போது வந்துள்ள கடிதம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் கன்டோன்மென்ட்டில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மிரட்டல் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே ரயில் நிலையத்தில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.