பலாத்காரம் செய்வது எப்படி.. மாணவிகளுக்கு 'கற்றுக்கொடுத்த' ஆசிரியர் கைது
போபால்: ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பலாத்காரம் செய்வது எப்படி, முத்தம் கொடுப்பது எப்படி, செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி என்பதுகுறித்தெல்லாம் பாடம் நடத்திய கிறிஸ்த மிஷினரி பள்ளியினின் நூலகர் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரிலுள்ளது ஒரு கிறிஸ்தவ மிஷினரி பள்ளி. இந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் விடுமுறையில் இருந்த நிலையில், அவருக்கு பதிலாக 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஒரு 'ப்ரீயடை' நூலகராக பணியாற்றிய ஹேரி பிலிப்ஸ் (35) எடுத்துள்ளார்.
அந்த பாடவேளையின்போது, எப்படி, முத்தம் தருவது, எப்படி பலாத்காரம் செய்வது, எப்படி செக்ஸ் வைத்துக்கொள்வது என்பது குறித்தெல்லாம் ஆபாசமாக குழந்தைகளிடம் பேசியுள்ளார்.
மாணவி ஒருவர் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்ததையடுத்து பிலிப்ஸ் நடவடிக்கை அம்பலத்துக்கு வந்தது. பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் பிலிப்சை கைது செய்துள்ளனர். அவரை பணியில் இருந்து நீக்கம் செய்து பள்ளி உத்தரவிட்டுள்ளது. பிலிப்ஸ் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.