வாழ்க்கை ஒரு வட்டம்பா... சொல்கிறார் நந்தன் நிலகேனி
26ல் தொடங்கினேன் இப்போது 62ல் மீண்டும் இணைந்துள்ளேன் வாழ்க்கை ஒரு வட்டம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இணைந்துள்ள நந்தன் நிலகேனி கூறியுள்ளார்.
பெங்களூரு: 26 வயதில் இன்ஃபோசிஸை தொடங்கியவர்களில் ஒருவராக இருந்த தான் தற்போது 62-வது வயதில் மீண்டும் இணைந்துள்ளேன் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்த்துகிறது என்று நந்தன் நிலகேனி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதார் அடையாள அட்டை கட்டமைப்பை உருவாக்கிய நிலகேனி தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், என்னை அழைத்து இந்த பதவியை கொடுத்துள்ளனர். நான் பங்குதாரர்களுக்கும், பணியாளர்களுக்கும் 100 சதவிகிதம் என் பங்களிப்பை தருவேன் என்றார்.
ஆதார் நடைமுறை தடைகளை முறியடித்து வெற்றிக் கொடி நாட்டும் என்று கூறினார். தனி நபர் ரகசியம் அடிப்படை உரிமையே என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
Joined @Infosys at 26, re-joined it at 62. Life does turn full circle!
— Nandan Nilekani (@NandanNilekani) August 25, 2017
26 வயதில் இன்ஃபோசிஸை தொடங்கியவர்களில் ஒருவராக இருந்த தான் தற்போது 62வது வயதில் மீண்டும் அதனுள் நுழைந்தது வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை காட்டுவதாகவும் நிலகேனி தெரிவித்துள்ளார்.