நிர்மலா சீதாராமன் பயணித்த சுகோய்.. இதுக்கு முன்னாடி யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போலவே சுகோய் போர் விமானத்தில் சில முக்கிய நபர்களும் பறந்து இருக்கிறார்கள்.
ஜெய்ப்பூர்: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போலவே சுகோய் போர் விமானத்தில் சில முக்கிய பிரரலங்களும் பறந்து இருக்கிறார்கள்.
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுகோய் 30எம்கேஐ போர் விமானத்தில் பறந்து இருக்கிறார். ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் விமான படை நிலையத்தில் இருந்து அவர் பயணம் செய்துள்ளார்.
இரண்டு பேர் மட்டுமே உட்கார கூடிய இந்த விமானத்தில் இதற்கு முன்பே சில பிரபலங்கள் பறந்து இருக்கிறார்கள். இந்த விமானம் பிரபலங்களின் முக்கிய தேர்வாக மாறியுள்ளது.
பெர்னாண்டஸ் முதல் பிரபலம்
முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 2004ல் தேர்தல் வருவதற்கு முன்பு இந்த விமானத்தில் முதல்முறையாக பறந்தார். இந்த சுகோய் 30எம்கேஐ விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் இவர்தான்.
கலாம் சவாரி செய்த சுகோய்
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்த விமானத்தில் பயணம் செய்து சுகோயில் பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.
சச்சினும், டோணியும்
அதேபோல் விமான படையில் சிறப்பு கெளரப் பதவி அளிக்கப்பட்டு இருக்கும் சச்சின், டோணி ஆகியோரும் இதில் பயணித்து இருக்கிறார்கள். இதில் பயணித்த கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் மட்டுமே.
முதல் பெண்மணி பிரதீபா பாட்டீல்
நிர்மலா சீதாராமனுக்கு முன்பே இதில் பெண் பிரமுகர் ஒருவர் பயணித்துள்ளார். குடியரசுத் தலைவராக இருந்த போது பிரதீபா பாட்டீல் இதில் பயணித்து இருக்கிறார். அந்த வகையில் நிர்மலா 2வது பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.