BREAKING NEWS: கள்ளக்காதல் குற்றமில்லை.. 497வது பிரிவு ரத்து.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
சர்ச்சைக்குரிய இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
டெல்லி: சர்ச்சைக்குரிய இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளித்து வருகிறது. பெண்ணின் கணவர் என்பவர் அவருக்கு எஜமானர் அல்ல. திருமண பந்தத்திற்கு அப்பாலான தகாத உறவு குற்றமில்லை. அது தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை என்று தீர்ப்பை வாசிக்கும் தலைை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியத் தண்டனைச் சட்டம் 497 என்பது ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இதில் அந்த பெண் தண்டிக்கப்பட மாட்டார். ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.
Recommended Video
இந்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்டும். இந்த சட்டத்திற்குள் பெண்களும் கொண்டுவரப்படுவார்களா, இல்லை சட்டம் மொத்தமாக நீக்கப்படுமா, என்று இன்று தீர்ப்பு அளிக்கப்படும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.