சரி.. காந்திநகரிலேயே போட்டியிடுகிறேன்: ஒப்புக் கொண்டார் அத்வானி !!
டெல்லி: லோக்சபா தேர்தலில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலேயே போட்டியிட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக மேலிடம் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் காந்திநகர் தொகுதியில் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டால் மோடி ஆதரவாளர்கள் தம்மை தோற்கடித்துவிடுவார்கள் என்பதற்காக மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அடம்பிடித்தார் அத்வானி.
இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி உள்ளிட்ட பலரும் அத்வானியை சமாதானப்படுத்திப் பார்த்தனர். ஒருகட்டத்தில் காந்திநகரில் அத்வானிக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என்றும் கூட கூறப்பட்டது.
இந்நிலையில் திடீரென காந்திநகர் தொகுதியிலேயே போட்டியிடுகிறேன் என்று அத்வானி அறிவித்திருக்கிறார்.