ஆந்திர சட்டசபை தேர்தலில் 73% வாக்குப்பதிவு! சிக்கிம், அருணாசலப் பிரதேசம், ஒடிசாவிலும் விறுவிறுப்பு
லோக்சபா தேர்தலுடன் சேர்த்து மொத்தம் நான்கு மாநில சட்டசபை தேர்தலும் இன்று நடந்தது.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலுடன் சேர்த்து மொத்தம் நான்கு மாநில சட்டசபை தேர்தலும் இன்று நடந்தது. காலை 7 மணிக்கு இந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
இன்று நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடந்தது. நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடந்தது. மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடந்தது.
இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், ஒடிசா (சில தொகுதிகள்) ஆகிய சட்டசபைக்கும் இன்றுதான் தேர்தல் நடந்தது.
ஆந்திரா என்ன
இதில் ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடந்தது.ஒடிசாவில் சில தொகுதிகளில் இன்று முதற்கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை இடங்கள் உள்ளது. அனைத்திற்கும் இன்றும் தேர்தல் நடந்தது.
ஒடிசாவில்
அங்கு மொத்தம் 3.93 கோடி பேர் இன்று வாக்களிக்க இருக்கிறார்கள். ஒடிசாவில் மொத்தம் 147 இடங்கள் உள்ளது. இங்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
அருணாசலப்பிரதேசத்தில் எப்படி
அருணாசலப்பிரதேசத்தில் இன்று 60 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதேபோல் சிக்கிமில் இன்று 32 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இந்த தேர்தலும் நடந்தது. இதனால் இந்த மாநிலங்களில் தற்போது கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
எவ்வளவு சதவிகிதம்
இந்த நிலையில் தற்போது வரை
- ஆந்திர பிரதேசத்தில் 73% வாக்குப்பதிவு
- அருணாசலப்பிரதேசத்தில் 66% வாக்குப்பதிவு
- ஒடிசாவில் 66% வாக்குப்பதிவு
- சிக்கிமில் 69% வாக்குப்பதிவாகி உள்ளது.