For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் தொடக்கமே பிரச்சனை.. 92,000 வாக்குபதிவு எந்திரங்கள் பழுது.. மாற்று இல்லாததால் சிக்கல்!

லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் நடக்கும் ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections: ஆந்திராவில் பல பூத்களில் வேலை செய்யாத வாக்குபதிவு எந்திரம் | எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்-வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் நடக்கும் ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் கிட்டத்தட்ட 92,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆகியுள்ளது.

    லோக்சபா தேர்தலுடன் சேர்த்து மொத்தம் நான்கு மாநில சட்டசபை தேர்தலும் இன்று நடந்து வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.

    ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், ஒடிசா (சில தொகுதிகள்) ஆகிய சட்டசபைக்கும் இன்றுதான் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    ஈவிஎம் வேலை செய்யவில்லை.. ஆந்திராவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.. முதல்வர் சந்திரபாபு கடிதம்!ஈவிஎம் வேலை செய்யவில்லை.. ஆந்திராவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.. முதல்வர் சந்திரபாபு கடிதம்!

    ஆந்திராவில் நிலை

    ஆந்திராவில் நிலை

    ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை இடங்கள் உள்ளது. அனைத்திற்கும் இன்று தேர்தல் நடக்கிறது. அங்கு மொத்தம் 3.93 கோடி பேர் இன்று வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் 10 லட்சம் வாக்காளர்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எத்தனை வாக்குச்சாவடிகள்

    எத்தனை வாக்குச்சாவடிகள்

    அங்கு 46,120 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவு தொடங்குவதில் தாமதம் ஆகியுள்ளது.

    எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    குண்டூர், அனந்தப்பூர், விசாகப்பட்டினம், கோதாவரியில் வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் தொடங்கி உள்ள நிலையில் கோளாறு காரணமாக ஆந்திராவில் மட்டும் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

    மாற்று ஏற்பாடு

    மாற்று ஏற்பாடு

    100க்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளது. அதேபோல் கிட்டத்தட்ட 92,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆகியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் மூலம் வெறும் 43 இயந்திரங்களுக்கே மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இதனால் அங்கு பல வாக்குச்சாவடிகளில் இன்னும் தேர்தல் தொடங்கவே இல்லை. இதனால் அங்கு அதிகாரிகள் அவசரமாக பணிகளை மேற்கொண்டு, எந்திரங்களை சரி செய்யும் முயற்சிகளை செய்து வருகிறார்கள். அங்கு வாக்கு சதவிகிதம் பெரிய அளவில் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    English summary
    Lok Sabha Election 2019: EVM malfunctions in many parts of Andhra Pradesh booths.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X