For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்கள் விஷயத்தில் பேசுறது ஒன்ணு, செய்யுறது ஒண்ணு... பாஜக மீது புகார்

Google Oneindia Tamil News

பாட்னா: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை தடுப்பதாக எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பீகார் மக்களவை தேர்தலில் 3 பெண்களுக்குத்தான் சீட் கொடுத்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெண்களுக்கு மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்ததாக எதிர்க்கட்சிகளை திட்டி தீர்த்தது,

ஆனால் இப்போது தேசிய ஜனநாய கூட்டணியே பீகாரில் பெண்களுக்கு சீட்டு கொடுக்கும் விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அங்கு 3 பெண்களுக்கு மட்டுமே சீட்டு கொடுத்திருக்கிறது.

பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது பெண் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு!பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது பெண் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு!

பீகார் தேர்தல்

பீகார் தேர்தல்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19 தேதி வரை ஏழுக் கட்டங்களாக நடக்கிறது. நாடு முழுவதும் மட்டுமல்ல, பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்குமே 7 கட்டங்களாத்தான் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

பெண்களுக்கு குறைந்த சீட்

பெண்களுக்கு குறைந்த சீட்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி , பாஜக மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்து வருகின்றன. இந்த தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண்கள்

மூன்று பெண்கள்

தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 23ம் தேதி அறிவித்தது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கவிதா சிங் என்ற பெண், சிவான் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் ராமதேவி என்பவர் ஷெஓஹா தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல் லோக் ஜனசக்தி சார்பில் வீணா சிங் என்ற பெண் வைஷாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்.கூட்டணி

காங்.கூட்டணி

ஆனால் லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பீகாரில் 9 பெண்களுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது.

சீட் மறுப்பு

சீட் மறுப்பு

பீகாரில் பாஜக, ஜக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 17 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 6 தொகுதிகளிலும் இந்த முறை போட்டியிடுகின்றன. இதில் தலா ஒரு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு விளக்கம் அளித்த பீகார் பாஜக துணை தலைவர் திவேஷ் குமார், பெண்களுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் தான், ஆனால் கடந்த முறையைவிட (30 தொகுதிகள்), இந்த முறை குறைவாக போட்டியிட்டுள்ளோம். இதுபோன்ற சில பல காரணங்கள் இருக்கிறது என்றார்.

மத்தியில் பிரதிநிதித்துவம்

மத்தியில் பிரதிநிதித்துவம்

அதேநேரம் பாஜக அரசு மத்தியில் ஏரளமான பெண்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பதாக குறிப்பிட்ட திவேஷ் குமார், நிர்மலா சீதாராமன் (பாதுகாப்பு அமைச்சர்), சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு) ,ஸ்மித்ரா மகாஜன்(சபாநயகர்), உள்பட பல பெண்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்றார்.

ஓரே பதில்

ஓரே பதில்

இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜக பாடிய அதே பல்லவியை பாடியுள்ளது. ஜக்கிய ஜனதா தளம் கட்சி செய்தி தொடர்பாளர் நீராஜ் குமார் கூறுகையில், எங்க கட்சி நிறைய பெண்களுக்கு சீட் கொடுக்க ஆசைப்பட்டது. ஆனால் வெறும் 17 தொகுதியில் போட்டியிடுவதால் முடியவில்லை. பீகார் முதல்வர் நிதீஷ்குமார், உள்ளாட்சி தேர்தலில் பெண்களக்கு 35 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க விரும்புகிறார். கூடிய விரைவில் அது நடக்கும். 33 சதவீத இடஒதுக்கீடு மக்களவையில் நிறைவேற்றப்பட்டால் முதல் ஓட்டு எங்களுக்குத்தான், அதன் பிறகு அனைத்து கட்சிகளுமே பின்பற்றும் என்றார்.

மம்தா கட்சி

மம்தா கட்சி

இந்த தேசத்தில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை வரும் மக்களவை தேர்தலில் நிறைவேற்றி இருப்பது இரண்டே கட்சிகள் தான் . மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 41 சதவீத பெண்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் சார்பில் 33 சதவீத பெண்கள் போட்டியிடுகிறார்கள்.

English summary
Bihar NDA not reserved 33 per cent of its tickets for women in lok sabha polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X