நாங்கள் முன் வாசல் வழியே வருவோம்.. சிக்ஸ் அடிப்போம்.. பீகார் பேரணியில் ராகுல் உறுதி!
லோக்சபா தேர்தலில் முன்வாசல் வழியாக வந்து சிக்ஸ் அடிக்க தயார் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் பேரணியில் பேசி இருக்கிறார்.
பாட்னா: லோக்சபா தேர்தலில் முன்வாசல் வழியாக வந்து சிக்ஸ் அடிக்க தயார் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் பேரணியில் பேசி இருக்கிறார்.
பீகாரில் காங்கிரஸ் நடத்தி வரும் பேரணி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 30 வருடங்களுக்கு பின் பீகாரில் காங்கிரஸ் நடத்தும் மிகப்பெரிய பேரணி ஆகும் இது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடக்கிறது.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாங்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது. இதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
வேலை
ராகுல் தனது பேச்சில், பிரதமர் மோடி 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். யாருக்காவது இங்கு வேலை கிடைத்ததா? நாங்கள் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றோம். ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் இதையே செய்வோம்.
கடன்
பிரதமர் மோடி முட்டாள்தனமாக பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை. விவசாயிகளுக்கு தினம் 17 ரூபாய் என்று வருடம் 6000 ரூபாய் கொடுத்து அவர்களை அவமானப்படுத்துகிறார். விவசாயிகளை பிரதமர் மோடி கொஞ்சம் கூட மதிப்பதில்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
பணம் இல்லை
மோடிக்கு விவசாயிகளுக்கு பணம் கொடுக்கத்தான் வசதி இல்லை. அனில் அம்பானிக்கு 30000 கோடி ரூபாய் கொடுத்தார், நீரவ் மோடிக்கு 35000 கோடி ரூபாய் கொடுத்தார், மல்லையாவிற்கு 10000 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் மக்களுக்கு மட்டும் ஒன்றுமில்லை என்கிறார்.
சிக்ஸர்
இப்போது சொல்கிறேன். நாங்கள் பாஜக போல எங்கும் பின்வாசல் வழியே வந்தது இல்லை. லோக்சபா தேர்தலில் நாங்கள் எங்கும் பின்வாசல் வழியே வர முயற்சிக்க மாட்டோம். முன்வழியாக தைரியமாக வருவோம். பீகாரில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவின் உதவியுடன் நாங்கள் சிக்ஸர் அடிப்போம், என்று கூறியுள்ளார்.