தெலுங்கானா -12, சீமாந்திரா - 17... ஆந்திராவில் 29 தொகுதிகளில் நாளை மறுதேர்தல்
ஹைதராபாத்: ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 29 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா, சீமாந்திரா பகுதிகளில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதாகவும், சில வாக்குச்சாவடிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதாகவும் அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் குற்றம் சாட்டினர்.
அப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்துவது என முடிவெடித்தது.
இதனையடுத்து, தெலுங்கானா பகுதியில் 12 வாக்குச் சாவடிகளிலும், சீமாந்தரா பகுதியில் 17 வாக்குச்சாவடிகளிலும், நாளை மறுவாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது.
மறுவாக்குப் பதிவு நடைபெறும் இந்த வாக்குச்சாவடிகளில் கடந்த மாதம் 30ஆம் தேதியும், இம்மாதம் 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.