மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஏற்றார் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா
லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
டெல்லி: லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போது மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று கூடி இருக்கிறார்கள். முக்கியமாக தெலுங்கு தேசம் கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு இடையே பிரச்சனை வலுத்து இருக்கிறது. ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது.
இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது. சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் மத்திய அமைச்சரவை உடைந்தது. இதனால் அமைச்சரவையில் இருந்து தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள்.
அதேபோல் மத்திய அரசுக்கும் மற்ற மாநில கட்சிகளுக்கும் இடையில் பெரிய பிரச்சனை நிலவி வருகிறது . இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது.
ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அப்போது கடைசிவரை அவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் இந்த முறை தீர்மானம் வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியா தீர்மானம் கொண்டு வந்தார். தெலுங்கு தேசம் சார்பில் முதலில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
50க்கும் அதிகமான கட்சிகள் தீர்மானத்தை ஏற்றுகொண்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றார். இந்த தீர்மானம் மீது விவாதம் நடப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.