For Daily Alerts
Just In
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் வங்கி மோசடி மன்னன் நீரவ் மோடி
டெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வங்கிகளில் ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடி சுவிட்சர்லாந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேடப்படுவதாக ஜனவரி 31ம் தேதியே சி.பி.ஐ. அறிவித்தது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் ஜனவரி 6ம் தேதி நீரவ் மனைவி இந்தியாவில் இருந்து சென்றுள்ளார். மேலும் அவரது சகோதரர் நிஷால் மோடி ஜனவரி 1ம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளார்.
வழக்கில் தொடர்புள்ளவர் வெளிநாடு தப்பியுள்ளதால், மல்லையாவை போலவே நீரவ் மோடியும், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அவர் வெளிநாடு தப்பியுள்ளார்.
Comments
English summary
Look out notice issued against Nirav Modi for bank fraud.