ரயில் முன்பாய்ந்த திருவள்ளூர் காதல் ஜோடி.. சக்கரத்தில் சிக்கி நசுங்கிய தலைகள்.. சித்தூரில் பரபரப்பு
Recommended Video
சித்தூர்: திருப்பதி அருகே ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள கொத்தபள்ளி கிராமத்தில் மேலூரில் உள்ள ஆற்காடு மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருபவர் மோனிஷா. ஊத்துக்கோட்டை அருகே உள்ள எட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த் குமார். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் குப்பம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் தலையும் சக்கரத்தில் சிக்கி நசுங்கியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் உடல்களையும், அவர்களுடைய உடைமைகளையும் கைப்பற்றிய குப்பம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு ஏதும் கிளம்பியதால் இந்த முடிவுக்கு வந்தனரா, இல்லை யாராவது இவர்களை கொன்றுவிட்டு தற்கொலை போல் சித்தரித்துள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.