சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் புதிய விலை ரூ.888... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
Recommended Video
டெல்லி: கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.இதன்படி சென்னையில் இனி இன்று முதல் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 888.50-க்கு விற்கப்படும்.
மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ. 59 உயர்ந்துள்ளது. அதுபோல் மானியம் உள்ள சிலிண்டர்களின் விலையை ரூ. 2.89 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி காட்டியுள்ளன.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் அளித்த அறிக்கையில், கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படுகிறது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. சர்வதேச விலையில் மாற்றம் ஏற்பட்டதாலும், அன்னிய செலாவணியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாகவும் சிலிண்டர்களின் விலையை உயர்த்த முன்வந்துள்ளோம்.
மானியம் பெறும் சிலிண்டர்களின் விலை ரூ. 2.89 ஆக உயர்த்தப்பட்டுள்ளது ஜிஎஸ்டியால் மட்டுமே ஆகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் மானியம் உள்ள சிலிண்டர்களின் விலை ரூ. 502.4-க்கு விற்கப்படும்.
[சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு]
அக்டோபர் முதல் வாடிக்கையாளர்களுக்கு மானியத் தொகை ரூ. 320.49 முதல் ரூ. 376.60-ஆக உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் விலையும் ஏற்றம் கண்டுள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
சென்னையில் மானியமில்லாத ஒரு சிலிண்டரின் விலை தற்போது ரூ.838.50-க்கு விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்துக்கு பின்னர் ரூ. 888.50-க்கு விற்கப்படும். மானியமுள்ள சிலிண்டரின் விலை தற்போது ரூ. 470-க்கு விற்கப்படுகிறது. இனி இந்த சிலிண்டர்களின் விலை ரூ. 472.89 ஆக உயரும்.
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு இதுநாள் வரை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 470 மானியத்தை அரசு செலுத்தி வந்தது. இந்நிலையில் இனி ரூ.510 வங்கிக் கணக்கில் மானியமாக செலுத்தப்படும். கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது.