ராணுவத்தில் பணியை தொடங்கிய முதல்நாளே வைரல்.. டிரெண்டான லெப்டினன்ட் கர்னல் தோனியின் புகைப்படம்!
தோனியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து அவரின் மேனேஜர் தெரிவித்த கருத்துக்கள் பெரிய வைரலாகி உள்ளது.
ஸ்ரீநகர் : இந்திய ராணுவத்தில் கிரிக்கெட் வீரர் தோனி இன்று தனது பணியை தொடங்கினார். இன்னும் இரண்டு வாரங்கள் அவர் காஷ்மீர் எல்லையில் பணியாற்ற உள்ளார். அவரின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகில் தலைப்புச்செய்தியில் இருந்த வீரர் என்றால் அது கண்டிப்பாக தோனியாகத்தான் இருப்பார். உலகக் கோப்பை தொடர் முழுக்க பல்வேறு விஷயங்களுக்காக அவர் வைரலானார். அதன்பின் அமரப்பலி முறைகேடு தொடர்பான வழக்கில் சிக்கி வைரலானார். தற்போது ராணுவத்தில் இணைந்து இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறார்.
தோனிக்கு இந்திய ராணுவத்தின் மீது தீவிர ஆர்வம் இருக்கிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தில் முழு நேர பணியில் சேர வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.
ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடி காட்டும் பழனிச்சாமி.. 5 மாதத்தில் 116 அதிகாரிகள் மாற்றம்.. பகீர் காரணம்!
என்ன பயிற்சி
தற்போது தோனி இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னலாக சிறப்பு பொறுப்பில் இருக்கிறார். அங்கு சிறப்பாக பயிற்சி பெற்ற அவர் பாலிடான் பேட்ச் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் 2 மாதம் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்.
எங்கு இருக்கிறார்
மேற்கு இந்திய தீவுகள் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை.தற்போது இந்தியா பாரா மிலிட்டரி ராணுவ படைப்பிரிவின் 106 பிரிவில் அவர் இணைந்து காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வருகிறார். இன்று காலைதான் அவர் அந்த படை பிரிவில் இணைந்தார். தெற்கு காஷ்மீரில் விக்டர் படை குழுவில் அவர் பணியாற்றி வருகிறார்.
|
எப்போது
ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவர் இந்த படை பிரிவில் ரோந்து பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய உள்ளார். அவர் இன்று ராணுவ உடையில் சக வீரர்களை காஷ்மீரில் சந்தித்தார். அவர்களுக்கு கிரிக்கெட் பேட்டில் கையெழுத்து போட்டி பரிசாக வழங்கினார்.
செம வைரல்
அவர் கிரிக்கெட் பேட்டில் கையெழுத்து போடும் இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது. நாளை காலை தோனி பெரும்பாலும் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வருகிறது.