மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகானுக்கு கொரோனா பாசிட்டிவ்!
இந்தூர்: மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
இந்தப் பதிவை அவரே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ''எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும். தனிமைப்படுத்திக் கொள்ளவும். கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து தினமும் காலை ஆய்வு செய்து வருகிறேன். முடிந்த வரை வீட்டில் இருந்தவாறு வீடியோ மூலம் தினமும் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை மேற்கொள்வேன்.
அலுவல் பார்க்க முடியாத நாட்களில் என்னுடைய பணிகளை நகர்ப்புறத்துறைரை அமைச்சர், கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு முடிவுகளை மேற்கொள்வார்கள். நான் தனிப்பட்ட முறையில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
मेरे प्रिय प्रदेशवासियों, मुझे #COVID19 के लक्षण आ रहे थे, टेस्ट के बाद मेरी रिपोर्ट पॉज़िटिव आई है। मेरी सभी साथियों से अपील है कि जो भी मेरे संपर्क में आए हैं, वह अपना कोरोना टेस्ट करवा लें। मेरे निकट संपर्क वाले लोग क्वारन्टीन में चले जाएँ।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020
மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 25,474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17,359 பேர் குணமடைந்துள்ளனர். 780 பேர் உயிரிழந்துள்ளனர்.
#COVID19 का समय पर इलाज होता है तो व्यक्ति बिल्कुल ठीक हो जाता है। मैं 25 मार्च से प्रत्येक शाम को कोरोना संक्रमण की स्थिति की समीक्षा बैठक करता रहा हूँ। मैं यथासंभव अब वीडियो कांफ्रेंसिंग से कोरोना की समीक्षा करने का प्रयास करूंगा।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி