மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோட்டலில் பெரும் தீ விபத்து
Recommended Video
இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஹோட்டலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்
மத்திய பிரதேசத்தின் இந்தூரின் விஜய் நகர் பகுதியில் உள்ள கோல்டன் ஹோட்டலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்தை எட்டியுள்ளன, மேலும் தீயை அணைக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீ விபத்து ஏற்பட்டபோது ஏராளமான மக்கள் ஹோட்டலுக்குள் இருந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்களால் பத்திரமாக வெளியற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இதுவரை யாருக்கும் காயங்களும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானுக்கு ஆதரவா? மலேசியா, துருக்கியை பகைக்கும் இந்தியா.. உறவில் ஏற்படும் பெரும் விரிசல்!
Huge fire at Hotel Golden Gate Indore. Thank God everyone trapped in it survived. In spite of regular Fire incidences we just dont take #FireSafety seriously. pic.twitter.com/M87mGXJwfg
— Sanjiv Shrivastava (@Sanjivstar) October 21, 2019
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் அந்த ஹோட்டலின் முன்புறம் முழுதும் தீப்பிடித்து எரிகிறது, கடுமையான புகைமூட்டம் சுற்றிலும் காணப்படுகிறது.
Madhya Pradesh: Fire breaks out at a hotel in Indore. More details awaited. pic.twitter.com/gzdsJuQo9J
— ANI (@ANI) October 21, 2019
மற்றொரு படத்தில், ஹோட்டலின் முன்பக்கம் அழிந்து கடுமையான தீப்பிழம்புடன் உள்பக்கம் எரியும் காட்சிகள் தெரிகிறது. அதை அணைக்கு முயற்சியில் தண்ணீருடன் ஹோட்டலுக்கு வெளியே நின்று வாகனங்கள் ஈடுபட்டு வரும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. மிகவும் நெரிசலான அந்த சாலையில் கடுமையா தீவிபத்து ஏற்பட்டு உள்ளது.