For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாரத்துக்கு ஒருமுறை குளித்த கணவன்.... விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனைவி

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவர் வாரம் ஒரு முறை மட்டுமே குளிப்பதாகவும் அவரிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

கணவன் குடிக்கிறார், வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார், ஆண்மை இல்லை, எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டது என பல காரணங்களை கூறி பெண்கள் விவகாரத்து கேட்பதை பார்த்திருப்போம். ஏன் குறட்டை விடுகிறார் கணவர், எனவே விவாகரத்து வேண்டும் என்று கூட சிலர் வழக்கு போட்டுள்ளனர்.

Madhya Pradesh: Husband refuses to bathe for almost week; wife files for divorce

இந்நிலையில் போபால் அருகே பாரிகார் என்ற பகுதியைச் சேர்ந்த 23வயது இளம் பெண் ஒருவர் தனது கணவர் வாரம் ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், ஒழுங்காக சேவ் செய்வதில்லை என்றும் புகார் கூறி அவருடன் வாழ முடியாது என்று விவகாரத்து கேட்டு வழக்கு தொடந்துள்ளார்.

திமுக பிரமுகர் காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்.. விரட்டி பிடித்தது தேர்தல் பறக்கும் படை திமுக பிரமுகர் காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்.. விரட்டி பிடித்தது தேர்தல் பறக்கும் படை

அந்த இளைஞருடன் கடந்த ஆண்டுதான் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை. அவர்கள் இருவரும் பரஸ்பரம் சம்மதத்துடன், போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றம் இவர்களை 6 மாதம் பிரிந்து இருக்கும் படி உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு விவாகரத்து குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என வழக்கறிஞர் ஆவோதி கூறினார்.

முன்னதாக விவகாரத்து கேட்ட தம்பதிகளிடம் அவர்களது பெற்றோர்கள் விவாகரத்து வேண்டாம் என்று இருவரிடமும் சமரசம் பேசியுள்ளனர். ஆனால் அந்த பெண் சமரசத்தை ஏற்கவில்லை.

English summary
Husband refuses to shave, bathe for almost week; wife files for divorce in Madhya Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X