For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பகீர் வீடியோ.. சொல்ல சொல்ல கேட்காமல் ஆற்றை கடந்தவர்.. அடித்துச் சென்ற வெள்ளம்

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் பொதுமக்கள் சொல்ல சொல்ல கேட்காமல் ஆற்றை கடந்தவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வடமாநிலங்களையும் வெளுத்து வாங்கி வருகிறது. மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கனமழையால் அங்கு ஓடும் ஆறுகளில் பெரிள அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Madhya Pradesh Man washed away while crossing a flooded river in Rajgarh yesterday

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார்க்கில் பாயும் நதியிலும் கனமழையில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ராஜ்கார்க்கில் பாய்ந்தோடும் வெள்ளத்தை கடந்து ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு ஒருவர் நேற்று செல்ல முயன்றார். அவரை செல்ல வேண்டாம் என சுற்றியிருந்தவர்கள் எச்சரித்தும் அவர் கேட்காமல் தொடர்ந்து வெள்ளத்தில் நடந்து சென்றார்.

இதனால் அவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை போலீசார் இன்று மீட்டனர். இந்நிலையில் அவர் வெள்ளத்தில்அடித்துச்செல்லப்படும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சியில் பொதுமக்கள் எச்சரிப்பதும், அவர் மீறி நடக்கும் போது ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதுமாக காட்சி உள்ளது.

English summary
Madhya Pradesh Man washed away while crossing a flooded river in Rajgarh yesterday. According to police, the body has been recovered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X