கல்யாணம் முடிஞ்சு மாமியார் வீட்டுக்கு மருமகள்கள்.. சாரி.. அக்கா தங்கை கொடுத்த மாஸ் என்ட்ரி!
போபால்: மத்திய பிரதேச மாநிலம், கிழக்கு நிமார் மாவட்டத்தில் உள்ள ஊர் கந்த்வா. இந்த ஊரைச் சேர்ந்த அக்காள் தங்கைகளுக்கு திருமணம் முடிந்து தங்களின் மாமியார் வீட்டுக்கு அதாவது புகுந்த வீட்டுக்கு சூப்பராக சென்றுள்ளார்கள்.
அவர்களின் திருமண ஊர்வலம் தான் மத்திய பிரதேச மாநிலத்தை தாண்டி வட இந்தியா முழுவதும் பேச்சாக உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் சாக்ஷி மற்றும் பிரிஷ்தி என்ற அக்கா தங்கை இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் முடிந்தது. இருவரும் தங்கள் மாமியார் வீட்டுக்கு அதாவது தாங்கள் வாழ போகும் கணவனின் வீட்டுக்கு போய் இறங்கிய விதம் அம்மாநிலத்தையே மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
"யாருடா.. என் பொண்டாட்டிகிட்ட அசிங்கமா பேசினது.. வெட்டாமல் போகமாட்டேன்.. அரிவாளுடன் பாய்ந்த கணவர்!
படிதார் சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் தங்கள் ஜாதி வழக்கப்படி 22ம் தேதி திருமணம் முடிந்தது. அதன் பின்னர் இருவரும் அழகான நகைகள் அதிகமாக அணிந்து, பட்டுப்புடவை அணிந்து, தலையில் தலைப்பாகை கட்டி, சும்மா ஜம்முன்னு குதிரையில் ஏறி வாளை ஏந்தியபடி ஊர்வலமாக தங்களின் கணவன் வீட்டுக்கு ஒரே நேரத்தில் புறப்பட்டு சென்றனர்.
Madhya Pradesh: Sakshi and Srishti, two sisters who had their wedding ceremonies on 22nd January, took out their own wedding procession (baraat) and rode horses to reach houses of their grooms in Khandwa, as a tradition followed by Patidar community. pic.twitter.com/80o27FtZuY
— ANI (@ANI) January 24, 2020
இந்த ஊர்வலத்தை பற்றித்தான் அந்த ஊரே வாயை பிளந்து பேசிக்கொண்டிருந்தது. ராணிகளை போல் மகள்களை ஒய்யாரமாக புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அவரது தந்தை.
"இந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன், அவர்கள் இந்த பாரம்பரியத்தை பின்பற்றி வருகிறார்கள்" என்று கிருஷ்டி என்பவர் கூறினார்.
மணப்பெண்களின் தந்தை மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நாட்டின் பெண்களுக்கு மரியாதை அளிக்க பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.