ஹெலிகாப்டர் விபத்தில் மயிரிழையில் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
ஹெலிக்காப்டர் விபத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார்.
லத்தூர்: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சென்ற ஹெலிக்காப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் முதல்வர் ஃபட்னாவிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது குழு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். லத்தூர் என்ற இடத்தில் சென்றபோது ஹெலிக்காப்டரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்க விமானி முடிவு செய்தார். ஹெலிக்காப்டரை தரையிறக்கிய போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
உயிர் தப்பிய முதல்வர்
ஹெலிக்காப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உயிர் தப்பினார்.
|
விசாரணைக்கு உத்தரவு
அவருடன் இருந்த அதிகாரிகளும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது குறித்து வசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
|
டிவிட்டரில் தெரிவித்த முதல்வர்
முதல்வர் சென்ற ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஃபட்னாவிஸ், தாங்கள் சென்ற ஹெலிக்காப்டர் லித்தூரில் விபத்துக்குள்ளானது.
கவலைப்பட வேண்டாம்
ஆனால் நானும் என் குழுவினரும் பாதுகாப்பாக உள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கவலைப்பட வேண்டம் என்றும் முதல்வர் ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.