பிரதமர் மோடி. காங். தலைவர் சோனியாவுடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு
டெல்லி: பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே இன்று டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் நீண்டகால கூட்டணி கட்சியாக இருந்தது சிவசேனா. ஆனால் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையேயான உறவு முறிந்தது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசில் மூன்று கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் இன்று உத்தவ் தாக்கரே சந்தித்தார். மகாராஷ்டிரா அமைச்சரும் உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரேவும் இச்சந்திப்பின் போது உடன் இருந்தார்.
Delhi: Chief Minister of Maharashtra, Uddhav Thackeray and Minister in Maharashtra Government, Aaditya Thackeray met Congress Interim President Sonia Gandhi at her residence at 10, Janpath, today. pic.twitter.com/Xuo1MUUVw9
— ANI (@ANI) February 21, 2020
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.