மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 LIVE: துஷ்யந்த் செளதாலாவை முதல்வராக்குமா காங்.?
மும்பை: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.
கடந்த திங்கள் கிழமை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கடந்த 2 மாதங்களாக இந்த 2 மாநில தேர்தல் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. மொத்தமாக அங்கு 56.33% வாக்குகள் பதிவானது. அதேபோல் ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அங்கு 61.63% வாக்குகள் பதிவானது.
இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அதிக கவனத்திற்கு உள்ளானது. இரண்டு மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. தேர்தல் தொடர்பான நொடிக்கு நொடி செய்திகளுக்கு ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்!
ஹரியானா
Dushyant Chautala,JJP: Counting of slips from a VVPAT is underway. As soon as I get certificate,I'll discuss with everyone,hold meeting with MLAs tomorrow&decide future course of action.Too early to say anything.I believe state wants change&JJP will bring it. #HaryanaAssemblyPoll pic.twitter.com/bavFtOhLJL
— ANI (@ANI) October 24, 2019
உத்தர பிரதேசம்
#WATCH: Congress General Secretary for UP (East) Priyanka Gandhi Vadra in Raebareli says, "I haven't seen the latest trends, really happy at both (Haryana and Maharashtra). We also are happy about the fact that here in UP our vote percentage has increased." pic.twitter.com/WICkvwnUqd
— ANI UP (@ANINewsUP) October 24, 2019