கற்பழிப்பு புகார் கொடுக்க வந்த பெண்ணை நாசம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்
புகார் கொடுக்க வந்த சப்-இன்பெக்டர் கற்பழித்துள்ளார்.
தானே: காமுகர்களால் ஏற்கனவே சிதைக்கப்பட்டு உதவி கோரி ஓடிவந்த இளம்பெண்ணை, போலீஸ்காரரே நாசமாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா பிவாண்டியை சேர்ந்தவர் ரோஹன் கொன்ஜாரி. இவர் சாந்திநகர் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இந்நிலையில் ஒரு இளம் சமீபத்தில் அந்த ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கிருந்த ரோஹனிடம் "நான் சதீஷ் என்பரை காதலித்தேன். இதற்கு அவரது முன்னாள் காதலி எதிர்த்து தெரிவித்தார். நான் சதீஷ்கூட பழகுறது அவளுக்கு பிடிக்கல. அதனால் அவளுடைய நண்பன் சலீம் என்பவரை தூண்டிவிட்டாள்.
வீடியோவில் படம்
சலீம் என்னிடம் சமாதானம் பேசுவது போல வந்து, கூல்டிரிங்ஸ் கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கி விட்டேன். அந்த நேரத்தில் என்னை பலாத்காரம் செய்துவிட்டார். என்னை கற்பழிக்கும்போது, அதை வீடியோவில் படம் பிடித்து கொண்டனர்.
கதறி அழுதார்
இதற்கு சதீஷூம் உடந்தை. அதை காட்டி காட்டி என்னிடம் பணம் பறித்தனர். இதுவரை 43 ஆயிரம் பிடுங்கி விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கதறி அழுதார். இது சம்பந்தமாக புகாரும் எழுதி கொடுத்தார்.
பொய் கேஸ் போட்டுடுவேன்
வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார் ரோஹன். ஆரம்பிக்க மட்டும்தான் செய்தார்.. எதையுமே முழுசா விசாரிக்க தொடங்கவில்லை. புகார் கொடுக்க வந்த பெண்ணிடமே வேலையை காட்ட ஆரம்பித்தார். "நான் சொல்றபடி நீ நடந்துக்கலேன்னா, உன் மேல பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்" என்று சொல்லி சொல்லியே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்.
தலைமறைவு
இதனால் நிலைகுலைந்த அந்த பெண், மிரட்டி பலாத்காரம் செய்த ரோஹனுக்கு எதிராக கொன்காவ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இரு தரப்பிலும் தன்னை பலாத்காரம் செய்த விவரத்தையும் தெரிவித்தார். தன் மீது புகார் கொடுத்துள்ள விஷயம் தெரிந்து போய் ரோஹன் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.