Maharashtra & Haryana Election Exit Poll Results 2019 LIVE:வெளியானது பரபரப்பு எக்ஸிட் போல் முடிவுகள்
டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் இன்று முடிவடைந்துள்ளன. இதையடுத்து, மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில், பாஜக, சிவசேனா மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இரு மாநில தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், பல்வேறு முன்னணி டிவி சேனல்களும், ஏஜென்சிகளுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளன.
அதுகுறித்த உடனுக்குடனான தகவலுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருக்கவும்.