For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி,ஜெய்ப்பூர், லக்னோ உட்பட வட இந்திய நகரங்களில் கடும் நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகள் பதிவு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி உட்பட வட இந்தியா நகரங்களில் இன்று பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதேபோல் தமிழகம், புதுவை, கேரளா, ஒடிஷா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது.

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் தமிழகம் வரை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின.

English summary
A major earthquake has shaken the entire north India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X