மும்பை முறுக்கு பிழியும் கருவி தயாரிக்கும் கடையில் தீ விபத்து.. 12 பேர் பலி
மும்பை : மும்பையில் கய்ராணி சாலையில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மும்பை கய்ராணி சாலையில் உள்ள முறுக்கு பிழியும் கருவி தயாரிக்கும் கடை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,இன்று காலை 4.30 மணி அளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து விடாமல் எரிந்து வரும் தீயை அணைக்க 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தற்சமயம் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விபத்து ஏற்பட்ட சமயத்தில் கடைக்கு உள்ளே உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இதில் தீயில் கருகி உயிரிழந்து உள்ளனர். இதுவரை 12 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.
மேலும், உள்ளே சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார். இன்னும் தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து கடை உரிமையாளர் தெரிவிக்கையில், உள்ளே 16 தொழிலாளர்கள் தங்கி பணி புரிந்து வந்தனர். தற்போது மீதம் நால்வர் குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.