மோடியைப் போல் மமதா பானர்ஜி பொய் சொல்கிறார்… ராகுல் காந்தி பிரச்சாரம்
கொல்கத்தா: மம்தா பானர்ஜி பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், ஆனால் எதையும் செய்வதில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தின் மால்தா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சொன்னப்படி, இளைஞர்களுக்கு வேலை கிடைத்து விட்டதா? விவசாயிகளுக்கு உதவிகள் கிடைத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பிய அவர்,
நரேந்திர மோடி ஒரு புறம் பொய் சொல்கிறார் என்றும் மறுபுறம் உங்கள் முதல்வர் (மமதா பானர்ஜி) வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டு இருக்கிறார். ஆனால் எதுவும் நடந்தது போல் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தான், பிரதமர் மோடி பாதுகாவலராக உள்ளாரே தவிர, நாட்டு மக்களுக்கு அல்ல என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தும்கூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தேவகவுடா... காங்கிரஸ் எம். பி மிரட்டலால் மீண்டும் குழப்பம்
மோடிக்கு எதிராக ஓரணியில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள், தற்போது ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், பாஜகவுக்கு இது பலமாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெயரை மாற்றம் செய்துள்ளார் மம்தா பானர்ஜி. அதில் காங்கிரஸ் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.