அம்மா உணவகம் பாணியில் மே.வங்கத்தில் ரூ5க்கு சாப்பாடு.. தொடங்கிவைத்த மமதா
கொல்கத்தா: தமிழகத்தின் அம்மா உணவகம் பாணியில் மேற்கு வங்கத்தில் ரூ5க்கு சாப்பாடு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் மலிவு விலை உணவகம் எனும் அம்மா உணவகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு இட்லி ரூ1, சாம்பார் சாதம் ரூ5, தயிர் சாதம் ரூ5 என மலிவு விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன.
கொரோனா காலத்தில் அம்மா உணவகங்களில் இலவசமாகவே சாப்பாடு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.
திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல்
தற்போது மேற்கு வங்க மாநிலத்திலும் ரூ5க்கு சாப்பாடு வழங்கும் Maa Kitchen திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இந்த திட்டத்தை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் இத்திட்த்தை மமதா பானர்ஜி அறிமுகம்ம் செய்துள்ளார்.