For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் எழும் மூன்றாவது அணி.... சந்திரசேகர் ராவ் அழைப்புக்கு மமதா, ஹேமந்த் சோரன் ஆதரவு

தேசிய அரசியலில் மீண்டும் 3-வது அணி முழக்கம் எழுந்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவிற்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க மாநில கட்சிகள் திட்டம்- வீடியோ

    டெல்லி: தேசிய அரசியலில் மாநில கட்சிகளிடம் இருந்து மீண்டும் மூன்றாவது அணி முழக்கம் எழுந்துள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கலாம் என விடுக்கப்பட்ட அழைப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    1990களில் காங்கிரஸுக்கு எதிராக தேசிய முன்னணி உதயமானது. திமுக தலைவர் கருணாநிதி, ஆந்திரா முதல்வர் என்.டி. ராமராவ் என முதுபெரும் அரசியல் தலைவர்கள் விபி சிங் தலைமையில் உருவாக்கினர். 1989 தேர்தலில் மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது.

    காலம் மாற காங்கிரஸ்- பாஜக எனும் இருதுருவ அரசியல் தேசிய அரசியலில் மையம் கொண்டது. இதற்கு மாற்றாக அவ்வப்போது மூன்றாவது அணி முழக்கங்கள் எழுவதும் அடங்கிப் போவதும் தேறாமல் போய்விடுவதும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

    திடீரென 3-வது அணி முழக்கம்

    திடீரென 3-வது அணி முழக்கம்

    அண்மைகாலமாக கிழக்கு கடற்கரையோர மாநில கட்சிகள் கூட்டமைப்பு என்கிற கோஷமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்குவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீரென அழைப்பு விடுத்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

    வடகிழக்கு தேர்தல் முடிவுகள்

    வடகிழக்கு தேர்தல் முடிவுகள்

    பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள், மாநில கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்கிற கருத்துகளை வடகிழக்கு மாநில தேர்தல்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த நிலையில் 3-வது அணி முழக்கம் எழுந்துள்ளது.

    மமதா, ஹேமந்த் சோரன் வாழ்த்து

    மமதா, ஹேமந்த் சோரன் வாழ்த்து

    இம்முழக்கத்தைத் தொடர்ந்து சந்திரசேகர ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. அதேபோல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரனும் சந்திரசேகர ராவை தொடர்பு கொண்டு ஆலோசித்துள்ளார்.

    காங்கிரஸை தனிமைப்படுத்தும் வியூகம்

    காங்கிரஸை தனிமைப்படுத்தும் வியூகம்

    மஜ்லிஸ் கட்சியின் ஓவைசியும் சந்திரசேகர ராவின் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. காங்கிரஸின் எதிர்காலம் என்பதும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 3-வது அணி முழக்கம் என்பது காங்கிரஸை தனிமைப்படுத்தக் கூடிய வியூகமாகவும் பார்க்கப்படுகிறது.

    English summary
    Telangana chief minister Chandrasekhar Rao has received support from various political leaders for this Third Front idea.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X