For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லை மீறி பேசுகிறார் மம்தாஜி.. நண்பர்களாகும் போது வெட்கப்பட கூடாது.. சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்த மோடி- வீடியோ

    கொல்கத்தா: எல்லை மீறி பேசும் மம்தா பானர்ஜி, எதிர்காலத்தில் பிரதமர் மோடியுடன் பணியாற்ற வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது என்று மத்தியமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தாக்கி பேசியுள்ளார்.

    மேங்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கியும் பேசி வருகிறார். இதற்கு மோடியும் பிரச்சார மேடைகளில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

    Mamataji crossed all limits Says Sushma Swaraj

    இதனால், கருத்து மோதல் முற்றி வருகிறது. நேற்றைய பிரச்சாரத்தில் கூட, மோடியால் தான், ஜனநாயகம் கேள்விகுறியாகி உள்ளதாக கடுமையாக சாடினார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மம்தாஜி, நீங்கள் உங்களது எல்லை மீறி பேசி வருகிறீர்கள். நீங்கள் மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளீர்கள், மோடிஜி நாட்டின் பிரதமர் ஆவார். நாளை நீங்கள் அவருடன் பேச வேண்டும்.

    சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி

    எனவே, பஷீர் பத்ரால் எழுதப்பட்ட கவிதையின் இரண்டு வரிகளை நினைவு கூற விரும்புகிறேன். அதே சமயம், உங்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சில நாட்களில் மறுபடியும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, வெட்கப்பட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Sushma Swaraj said that Mamataji, do not feel ashamed when we have to become friends again someday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X