பட்டப்பகலில் நடுரோட்டில் போலீஸ் கண் முன்பு இளைஞரை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்- அதிர வைக்கும் வீடியோ
Recommended Video
ஹைதராபாத்: பட்டப்பகலில் நடுரோட்டில் போலீஸ் கண் முன்பு இளைஞரை இருவர் வெட்டி கொன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் , ஹைதராபாத்தில் பரப்பான சாலையில் ஒரு நபரை அரிவாளால் வெட்ட முயற்சிக்கிறார் மற்றொரு இளைஞர். பட்டப்பகலில் அவ்வழியாக பல்வேறு வாகனங்கள், ஆள்நடமாட்டம் என எல்லாம் இருந்தும் சர்வ சாதாரணமாக அந்த நபர் வெட்டப்படுகிறார்.
[அரசு பஸ்ஸை வழிமறித்த யானைகள் கூட்டம்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் ]
அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் அதை தடுக்க முயல்கிறார். எனினும் அவரை அந்த நபர் மிரட்டுகிறார். அதனால் போலீஸ்காரரும் பின்வாங்குகிறார். பலமுறை அரிவாளால் ஓங்கி அடித்ததால் அந்த இளைஞர் இறந்தார்.
Shocking murder in broad daylight. Man axed to death in Hyderabad. 2 men arrested.
— Pramod Madhav (@madhavpramod1) September 26, 2018
(What I don’t understand is why was a police vehicle standing idle next while the accused is chopping the victim!?!?) pic.twitter.com/cCtD1eqkTR
எனினும் அங்கிருந்த போலீஸ் வாகனம் என்ன செய்து கொண்டிருந்தது என்பது தெரியவில்லை. பட்டப்பகலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.