எருமை மாட்டையும் விடாத காமுகன்.. ஆந்திராவில் ஒரு அக்கிரமம்!
அடிலாபாத்: ஆந்திராவின் பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் எருமை மாட்டுடன் உறவு கொண்டு கைதாகியுள்ளார்.
அந்த "மனிதனின்" பெயர் நீலம் லச்சையா. இவர் கரீம் நகர் மாவட்ட், திம்மப்பூர் தாலுகாவுக்குட்பட்ட பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்தவர். சனிக்கிழமை இவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். எருமை மாட்டுடன் இவர் உடல் ரீதியான உறவு கொண்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர் பொஜ்ஜ பாலையா என்பவர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது மாட்டிடம், லச்சையா தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறியிருந்தார். இதையடுத்து லச்சையாவைப் போலீஸார் கைது செய்தனர்.
"சம்பவத்தை" நேரில் பார்த்த சிலர் கூறுகையில், லச்சையை, 3 ஆண்டுகளுக்கு முன்பு 3 சிறுவர்களைக் கொன்ற வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவர் ஆவார். இவர் தற்போது பரோலில் வந்துள்ளார் சம்பவத்தன்று அந்த எருமை மாட்டுக்கு பின்புறம் நிர்வாண நிலையில் காணப்பட்டார் லச்சையா. மாட்டின் கால்களையும், வாயையும் அவர் கட்டியிருந்தார் என்று கூறினர்.
லச்சையாவின் செயல் அப்பகுதியினரை பீதிக்குள்ளாக்கியுள்ளது.