For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் கைது

Google Oneindia Tamil News

காசியாபாத்: பக்கத்து வீட்டில் வசித்து வந்த 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை காசியாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே நாஸ்ரீபூர் கிராமத்தில் வசித்து வருபவர் அஜய். இவரது பக்கத்து வீட்டில் 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய அஜய் முயற்சித்துள்ளார்.

Man held for trying to rape 9-year-old in Ghaziabad

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தார், அஜயிடமிருந்து சிறுமியை மீட்டனர். தப்பி ஓட முயன்ற அஜயை வளைத்துப் பிடித்த மக்கள், அவரை அடித்து பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அஜயைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A man allegedly tried to rape a nine-year-old girl living in his neighbourhood in Nasripur village here after which he was arrested, police said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X