For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியை கொன்று.. கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு.. 3 நாட்களாக மேலே ஏறி படுத்து தூங்கிய கணவர்!

Google Oneindia Tamil News

போபால்: ஆர்த்தியை கொன்றுவிட்டு, கட்டிலுக்கு கீழே சடலத்தை வைத்துவிட்டு, அந்த கட்டில் மேலேயே 2 நாளாக படுத்து தூங்கி உள்ளார் கணவர்.. இந்த சம்பவத்தை கேட்டு மத்திய பிரதேச மக்கள் ஆடிப்போய் உள்ளனர்.

போபால் அருகே உள்ளது மோத்திநகர்.. இங்கு வசித்து வந்த தம்பதி ஷெர் சிங் - ஆர்த்தி அஹிர்வார்.. ஆர்த்திக்கு 32 வயதாகிறது.. இவர்களுக்கு 10 வயது குழந்தை ஒன்று உள்ளது.

 man killed wife and dumps body in box near bhopal

கணவர் சிங்குக்கு குடிப்பழக்கம் உள்ளது.. தண்ணி அடித்துவிட்டால் அன்றைக்கு முழுவதும் ஆர்த்தியை கண்மூடித்தனமாக அடித்து தாக்குவதுதான் வேலை. இதனால் மனம் நொந்த ஆர்த்தி, தன் அம்மா வீட்டிற்கு வந்து அடிக்கடி அழுது புலம்புவார்.

சில தினங்களுக்கு முன்பும் இப்படி சண்டை வரவும், அம்மா வீட்டுக்கு சென்ற ஆர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தார்.. தகராறு வெடித்தது.. இந்நிலையில், இவர்களின் அக்கம்பக்கத்து வீட்டினர் போலீசுக்கு போன் செய்து, தம்பதி வீட்டில் பெரிய தகராறு நடந்ததாகவும், மனைவியை கொலை செய்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய கத்தியை வாங்கிட்டு சிங் வீட்டுக்கு சென்றதாகவும், வீட்டில் இருந்து துர்நாற்றம் அடிப்பதாகவும் சொன்னார்கள்.

இதையடுத்து, போலீசார் சிங் வீட்டுக்கு வந்தனர்.. வீட்டுக்குள் நுழையும்போதே நாற்றம் குப்பென்று அடித்தது.. ரத்த வாடை அது.. ஆனால் ஆர்த்தியை காணோம்.. வீடெல்லாம் தேடி தேடி பார்த்தபோதுதான், கடைசியில் படுக்கைக்கு கீழே தேடி பார்த்தனர்.. அங்கே ஒரு மரபலகை ரூமில் ஆர்த்தி பிணமாக கிடந்தார். அங்கு ஆர்த்தி சடலத்தை மறைத்து வைத்துவிட்டு, அந்த கட்டிலுக்கு மேலேயே சிங் படுத்து கொண்டிருந்தார்.

கொடுமை.. பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. 30 நிமிடம் ஊசலாடிய உயிர்.. டிரைவர், கண்டக்டர் அராஜகம்கொடுமை.. பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. 30 நிமிடம் ஊசலாடிய உயிர்.. டிரைவர், கண்டக்டர் அராஜகம்

இதையடுத்து, சிங்கை கைது செய்த போலீசார், ஆர்த்தியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்.. பிறகு சிங்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது, 2 நாளைக்கு முன்னாடிதான் ஆர்த்தியை கொன்னேன்.. கழுத்தை நெரித்து கொன்னுட்டேன்.. யாருக்கும் தெரியாமல் இருக்கணும்னு, பெட்-டுக்கு கீழே ஒரு கப்போர்ட் ரெடி பண்ணி, அதுக்குள்ளதான் சடலத்தை பூட்டி வெச்சேன்" என்று தெரிவித்தார்..

அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களே கிலியிலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.

English summary
man killed wife and dumps body in box near bhopal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X