For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக் காதலால் நேர்ந்த கொடூரம்... மனைவி, காதலனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவன்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், புர்னேஷ் திவார். இவரது மனைவி குஷி (27). அதே பகுதியைச் சேர்ந்த பவன் திவார் என்பவரோடு குஷியாக கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு இருந்து வந்துள்ளார்.

தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு குஷியாக இருப்பதை அறிந்த புர்னேஷ், இந்த தகாத உறவை துண்டிக்கும்படி பலமுறை கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குஷி உல்லாசமாக இருப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பவனும், குஷியும் நேற்றிரவு தனிமையில் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புர்னேஷ் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையால் இருவரையும் சரமாரியாக கொலை வெறியுடன் தாக்கியுள்ளார். இதில் மண்டையில் பலத்த காயமடைந்த குஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் பவன் திவாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரும் உயிரும் போகும் வழியிலேயே பிரிந்தது.இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் புர்னேஷ் திவாரை தேடிவருகின்றனர்.

English summary
A 30-year-old man allegedly killed his wife and her paramour in Chhattisgarh's Janjgir-Champa district, police said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X