சண்டிகரில் மொபைல் கடையில் வயதான தம்பதியரை தாக்கிய குடிகாரன்: வைரல் வீடியோ
சண்டிகர்: மொபைல் விற்பனை கடைக்குள் புகுந்த குடிகாரன் ஒருவன் உரிமையாளர்களான வயதான தம்பதியரை கடுமையாக தாக்கிய சம்பவம் சண்டிகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து மிருக மனம் கொண்ட அந்த குடிகாரனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் தங்களை தாக்கிய குடிகாரனை மன்னிக்க தயாராக இருக்கின்றனர் முதிய தம்பதியினர்.
சண்டிகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் செல்போன் கடையை வைத்திருக்கும் ஜொஹிந்தர் பால் மற்றும் அவரது மனைவி சந்தோஷ் ஆகியோர் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இணைஞர் ஒருவர் ஏற்கனவே செல்போன் வாங்கியது தொடர்பாக முதியவர்களின் மகனுடன் ஏற்பட்ட பிரச்சனையை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தாக்கிய குடிகாரன்
வயதான தம்பதியை சரமாரியாக தாக்கிய இளைஞர், கடையில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தினார். முதிய பெண்மணியை ஓங்கி அடித்தார். அந்த பெண் வலியில் அலறியபடி நிற்கும்போதே, அடுத்ததாக அந்த பெண்ணின் கணவரை தாக்க முயன்றார் உடனே அந்த வாலிபரை முதிய பெண்மணி தடுக்க முயற்சிக்கவே, அவரை தள்ளிவிட்டுவிட்டு பெண்ணின் கணவரான முதியவரை தனது தலையால் கண்மூடித்தனமாக தாக்கினான்.
குடிகாரன் கைது
இந்த சம்பவம் வணிக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, அந்த குடிகார இளைஞனை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த முதியவர்கள்
இந்த சம்பவம் நடந்தபோது அந்த கடையிலும், கடை அருகேயும் நின்றிருந்தவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர, யாருமே அந்த வயதான தம்பதியரை காப்பாற்ற முன்வரவில்லை. இந்த தாக்குதலில் அந்த வயதான பெண்ணின் தாடையிலும், முதியவரின் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
மன்னித்த முதியவர்கள்
இந்த வீடியோ யுடுயூப்பில் வெளியாகி வைராலாகியுள்ளது. தங்களது மகன் போன்ற வயதுடைய அந்த இளைஞரை தண்டிக்க விரும்பவி்லலை என்று கூறிய தம்பதியினர், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாலே போதும் என்று மிகவும் பெரிய மனதுடன் கூறியுள்ளனர்.