ஸ்பெயின் நாட்டுப் பெண் கத்தி முனையில் பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மும்பை: ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இசை பயின்று வருகிறார் 27 வயதான் ஸ்பெயின் நாட்டு பெண்.
அவர் கடந்த கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மனிதன் அவரை கத்தி முனையில் 2 முறை பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் இருந்த ரூ.35,000 மதிப்புள்ள பொருட்களுடன் தப்பியோடிவிட்டான்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுமார் 50 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இறுதியாக முகமது பாதுஷா முகமது இஸ்மாயில் அன்சாரி(30) என்பவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் தான் குற்றவாளி என்பது தெரிய வந்தது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அன்சாரி தான் குற்றவாளி என்று அடையாளம் காட்டியதை அடுத்து அன்சாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இன்று அலி அன்சாரிக்கு ஆயுள்தண்டனைவிதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.