என்ன இருந்தாலும் ரித்தர் சிங்குக்கு இவ்வளவு கோபம் ஆகாது.. குப்பென பத்த வச்சுட்டாரே!
சொந்த காரை தீ வைத்து கொளுத்திய நபரின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
காந்திநகர்: இருந்தாலும் ரித்தர் சிங்-குக்கு இவ்வளவு கோபம் கூடாது.. நடுரோட்டிலேயே தனது ஜீப்பை குப்பென பற்ற வைத்து விட்டார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர்தான் இந்த ரித்தர் சிங். இவர் தன்னுடைய நண்பர் நமிஷ் கோஹலுடன் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வண்டி நின்றுவிட்டது. அதனால் என்ன கோளாறு என்று பார்த்தபோது, பேட்டரி செயல்படவில்லை என்பது தெரிந்துள்ளது.
இதனால் ரித்தர் சிங்குக்கு அதிகமாக கோபம் வந்துவிட்டது. ரோட்டில் இத்தனை நடமாடுகிறார்களே, என்ன நினைப்பார்கள், என்ன ஆகும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.. அப்படியே ஜீப் மீது பெட்ரோலை தூக்கி ஊற்றி கொளுத்தி விட்டார். இதில் வண்டி குபுகுபுவென தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த மக்கள், ஆளுக்கொரு பக்கம் தலைதெறித்து சிதறி ஓடினார்கள். கோபமடைந்து, ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி ஜீப்பை கொளுத்துவதை கூடவே இருந்த நண்பன் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்திலும் போட்டுள்ளார்.
இந்த வீடியோ, ஜீப் தீ பிடித்ததை விட வேகமாக பரவி வருகிறது. தகவலறிந்த போலீஸ், அந்த வீடியோ பதிவை வைத்து 2 பேரையும் கைது செய்துள்ளனர். பொது இடத்தை சேதப்படுத்துதல், பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற குற்ற வழக்குகளும் அவர்கள் மீது பதிவாகி உள்ளன. ஜீப் தீப்பிடித்து எரியும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.