தலைகீழாக கட்டிவைத்து அடி.. பீகாரில் மொபைல் திருடியவருக்கு கொடூர தண்டனை- வீடியோ
பீகாரில் மொபைல் திருடிய இளைஞர் ஒருவர் ஊர்க்காரர்களால் தலைகீழாக கட்டிவைத்து அடிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
பாட்னா: பீகாரில் மொபைல் திருடிய இளைஞர் ஒருவர் ஊர்க்காரர்களால் தலைகீழாக கட்டிவைத்து அடிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் உள்ள டார்பங்கா ஹிங்கோலி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனை இவர் திருடி உள்ளார். இதை அந்த ஊரில் இருந்த நபர்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து அவரை சிலர் ஒன்றாக சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள். கன்னத்தில் அடித்து முதலில் சிறிய அளவில் துன்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதன்பின் அவரை தலைகீழாக கட்டி தாக்கியுள்ளனர்.
#WATCH Man beaten and hung upside down for stealing a mobile phone in Darbhanga's Hingoli village. Police says, '3 people who thrashed the man have been arrested.' #Bihar pic.twitter.com/KOzE1XBo9D
— ANI (@ANI) April 18, 2018
சிறிய கிரேன் ஒன்றின் மூலம், இரும்பு செயினில் தலைகீழாக அவரை கட்டி தாக்கி இருக்கிறார்கள். குழந்தை, பெண்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதை அங்கு நின்ற ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். போலீஸ் இந்த பிரச்சனையில் மூன்று பேரை கைது செய்து இருக்கிறார்கள்.