For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரத்தம் சொட்ட சொட்ட மனைவியின் தலையுடன் போலீசில் சரணடைந்த இளைஞர்!

மனைவியின் தலையை வெட்டியதுடன் கணவன் போலீசில் சரணடைந்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மனைவியின் தலையுடன் போலீசில் சரணடைந்த இளைஞர்!- வீடியோ

    சிக்மங்களூரு: நாடு முழுவதும் வியாபித்து உள்ள கள்ளக்காதல் இறுதியில் விபரீதத்தில்தான் போய் முடிகிறது. இப்படித்தான், கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையை வெட்டி எறிந்துள்ளார் மங்களூரு இளைஞர் ஒருவர்.

    சிக்மங்களூரு அருகே சிவானி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். வயது 35. இவருடைய மனைவி ரூபா. வயது 28. இருவரும் இவர்களுக்கு 9 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

    விரக்தியில் சதீஷ்

    விரக்தியில் சதீஷ்

    ரூபாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்திருக்கிறது. இது ஒருநாள் சதீஷ்-க்கு தெரியவர, ரூபாவா கூப்பிட்டு கண்டித்தார். ஆனாலும் ரூபா கேட்கவில்லை. தொடர்ந்து அந்த இளைஞருடன் தொடர்பிலேயே இருந்தால். பலமுறை கண்டித்து பார்த்த சதீஷ் கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

    துண்டாக வெட்டினார்

    துண்டாக வெட்டினார்

    இந்நிலையில், வேலை விஷயமாக காலையிலேயே பெங்களூவரை சென்ற சதீஷ், மாலை நேரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது ரூபா வேறு ஒரு நபருடன் ஜாலியாக இருந்ததை கண்ணால் பார்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், ரூபாவையும், அந்த மற்றொரு நபரையும் சரமாரியாக அடித்து நொறுக்கினார். ஆனாலும் அந்த நபர் ரத்த காயத்துடன் ரூபா வீட்டிலிருந்து தப்பி ஓடினார். என்ன சொன்னாலும் அடங்காமல் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்ததால், ரூபா மீது அதிக கோபமானார் சதீஷ். அங்கிருந்த அரிவாளை எடுத்து, ரூபாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

    ரத்தம் சொட்ட சொட்ட..

    ரத்தம் சொட்ட சொட்ட..

    பின்னர் வெட்டி எடுக்கப்பட்ட ரூபாவின் தலையை ஒரு சாக்குப் பையில் போட்டு, பைக்கில் எடுத்து வைத்து கொண்டார். 20 கி.மீ. தொலைவில் உள்ள போலீஸ் ஸ்டேனுக்கு சதீஷ் பைக்கில் ரூபாவின் தலையை கொண்டு சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட கையில் தலையை பிடித்து கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தார் சதீஷ். நடந்த விவரங்களை கூறி சரணடைவதாகவும் கூறினார்.

    அதிர்ச்சியில் உறைந்தனர்

    அதிர்ச்சியில் உறைந்தனர்

    இந்த காட்சியை கண்டதும் ஸ்டேஷனில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றார்கள். இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். பின்னர் விரைந்து சென்று வீட்டில் கிடந்த ரூபாவின் தலையில்லா முண்டத்தை கைப்பற்றி, சதீஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    English summary
    Man walks around town with wife’s head in hand in Chikmangalur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X