பெண்களே.. உங்களை கிண்டல் செய்கிறார்களா?.. மேனகாவிடம் இந்த மெயில் ஐடியில் புகார் கூறலாம்
டெல்லி: உங்களை யாராவது கிண்டல் செய்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ எனக்குத் தகவல் கொடுங்கள் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி பெண்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை. அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. நிர்பயா சம்பவத்திற்குப் பிறகும் கூட கொடூரமான பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் நின்றபாடில்லை.
காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொலை செய்வது அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் சுவாதி படுகொலைச் சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது. இந்த நிலையில் மத்திய மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பெண்களுக்காக ஒரு உதவிச் சேவையை அறிவித்துள்ளார்.
Are you a woman who is trolled or abused? Inform me at [email protected].
— Maneka Gandhi (@Manekagandhibjp) July 5, 2016
தனது இமெயில் ஐடி ஒன்றை அறிவித்துள்ள மேனகா காந்தி, பிரச்சினையில் சிக்கும் பெண்கள் அதன் மூலமாக தன்னை அணுகி உதவி கோரலாம் என்று கூறியுள்ளார் மேனகா காந்தி.
[email protected] இதுதான் மேனகா காந்தி அறிவித்துள்ள இமெயில் ஐடியாகும்.