இங்கிலாந்து காதலரை மணக்கிறார் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா!
அரசியலில் தோல்வியை கண்ட இரோம் சர்மிளா,தனது நீண்ட நாள் காதலரை மணம் முடிக்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
குவஹாத்தி:தனது நீண்டநாள் காதலரை மணக்கிறார் மணிப்பூர் நாட்டின் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா. தேர்தலில் படுதோல்வியை கண்டபிறகு நமக்கு அரசியல் சரிப்பட்டு வராது,குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பிடலாம் என்று இரோம் முடிவெடுத்து,திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.
மணிப்பூரில் ஆயுத சட்டத்தை நீக்க வலியுறுத்தி,தொடர்ந்து 17 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி இரும்பு பெண்மணி என பெயர் பெற்றவர் இரோம் சர்மிளா. 45 வயதைக் கடந்துள்ள இரோம் அண்மையில்தான் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.மேலும் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
தனது இளமையை உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தி,நாட்டுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்த இரோம் சர்மிளாவுக்கு தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுக்கள் வெறும் 90 தான்.இதில் மிகவும் சோர்ந்து போனார் இரோம் சர்மிளா.
இந்த நிலையில் இரோம் சர்மிளா கடந்த 8 ஆண்டுகளாக, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டெஸ்மேண்ட் கவுடின்கோ என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரைத் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் இரோம். இதற்காக இங்கிலாந்து செல்வதற்காக சமீபத்தில் பாஸ்போட்டுக்கு விண்ணப்பமும் செய்துள்ளார் அவர்.அதில் தாமதம் ஆவதால் திருமண விழாவைக் கேரளாவில் வைத்துள்ளார் இரோம்.
கேரளாவில் தனது திருமணத்தை நடத்த இரோம் முடிவு செய்துள்ளார். விரைவில் டெஸ்மேண்ட், இந்தியா வந்ததும் திருமணம் நடக்க உள்ளது.திருமணத்திற்குப் பிறகும் இரோம் தனது, ஆயுத எதிர்ப்புப் போராட்டம் என்றும் கூறிவருகிறார்.