பீகார்: முன்னாள் முதல்வர் மஞ்சி ஒரு தொகுதியில் முன்னிலை, மற்றொன்றில் சரிவு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி தான் போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்றில் முன்னிலையில் உள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அவரது ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில் மாஞ்சி இமாம்கஞ்ச் மற்றும் மக்தும்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளில் இமாம்கஞ்சில் அவர் முன்னிலையில் உள்ளார். மக்தும்பூரில் முன்னிலையில் இருந்த அவர் பின்தங்கிவிட்டார்.
முன்னதாக பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கையில் மஞ்சி கூறுகையில்,
நான் பீகார் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கவில்லை. என்னை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கவில்லை. ஆனால் பீகார் மக்கள் என்னை முதல்வராக மீண்டும் பார்க்க விரும்பினால் அவர்களின் கோரிக்கையை ஏற்பேன். பீகாரில் மறுபடியும் காட்டாட்சி வராது என்றார்.