ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல்: மன்மோகன்சிங் வேட்பு மனுத் தாக்கல்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் மன்மோகன்சிங். 30 ஆண்டுகாலம் ராஜ்யசபாவில் எம்.பி.யாக பதவியாற்றி உள்ளார்.
தற்போது அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அதற்கு திமுக ஒத்துழைப்பு தரவில்லை. இந்த நிலையில் ராஜஸ்தானில் பாஜக எம்பி மதன்லால் ஷைனி அண்மையில் காலமானார். இதையடுத்து வரும் 26-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
It is a matter of pride that former PM, Dr #ManmohanSingh ji has filed his nomination for RS seat from #Rajasthan. I extend best wishes to him on behalf of entire State.. pic.twitter.com/YZOvbD1VPi
— Ashok Gehlot (@ashokgehlot51) August 13, 2019
இத்தேர்தலில் போட்டியிட மன்மோகன்சிங் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.